(இ - ள்.) அன்னணம் புராணநூல் அகத்துத் தோன்றிய - அவ்வாறு மாபுராண நூலினிடத்திலே சொல்லப்பெற்ற, கல் நவில் இலங்குதோள் காளையானவன் - கல்தூண் போன்று விளங்கும் தோளையுடைய மருசி, மின் நவில் விசும்பில் நின்று இழிந்து - ஒளி விளங்குகின்ற விண்ணில் நின்றும் இறங்கி வீங்குநீர் மன்னிய வரைப்பகம் - மிகுந்த நீர் பொருந்திய கடலானது நிலைபெற்ற நிலவுலகத்தில், மலிரத்தோன்றினான் - சீர்த்தியானது மிகும்படி திவிட்டனாகப் பிறந்தான் (எ - று.) காளை - மருசி. திவிட்டனாய்த் தோன்றினான் என்க. |