அவனுக்குச் சுயம்பிரபை உரியவள் என்றல்

407. 2கானுடை விரிதிரை வையங் காக்கிய
மானுட வுடம்பினான் மறைந்து வந்தவத்
தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம்
தானடைந் தமர்வதற் குரிய டையலே.
 

     (இ - ள்.) கான்உடை விரி திரை வையம் காக்கிய - காடு களையுடையதும்
கடலாலே சூழப்பெற்றதுமாகிய உலகத்தைப் புரத்தற் பொருட்டு, மானுட உடம்பினால்
மறைந்துவந்த - மக்கள் யாக்கையைக்கொண்டு தேவ வடிவந்தோன்றாமல்வந்த, அத்
தேனுடை அலங்கலான் தெய்வமார்பகம் - தேன் பொருந்திய மாலையினையுடைய
அந்தத்திவிட்டனின் தெய்வத்தன்மை பொருந்திய மார்பிடத்தை, தையல் தான் அடைந்து
அமர்வதற்கு உரியள் - சுயம்பிரபையானவள் சேர்ந்து பொருந்துவதற்கு உரிமையை
உடையவள் ஆவள் (எ - று.)

சுயம்பிரபை அந்தத் திவிட்டனுக்கே உரியவள் என்று நிமித்திகன் உறுதியுடன் கூறுகிறான்.

( 169 )