(இ - ள்.) அவற்கு ஈந்தபின் - சுயம்பிரபையை அத்திவிட்டனுக்கு மணஞ்செய்து கொடுத்தபிறகு, ஆழிதாங்கிய - உருளைப்படையை யேந்தியுள்ள, ஈங்கு அவன்கொன்று - இவ்வித்தியாதர உலகத்து அரசனாகிய அவ்வச்சுவகண்டனைக் கொலை செய்துவிட்டு, உனக்கு இரண்டு சேடியும் - உனக்குத் தென்சேடி வடிசேடி ஆகிய இரண்டிடங்களையும், தாங்கிய திருவினான்தரும் என்றலும் - பெருமையைத் தாங்கியுள்ள திவிட்டனானவன் கொடுப்பான் என்று கூறுதலும், வேந்தன் வீங்கிய உவகையன் ஆயினான் - சுவலனசடியரசன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான் (எ - று.) திவிட்டன் சுயம்பிரபையை மணஞ் செய்தபிறகு, அச்சுவக்கிரீவனைக் கொன்று உத்தரசேடி தட்சணசேடி ஆகிய இரண்டு இடங்களையும் நின் ஆட்சிக்கு உட்படுத்துவான் என்று கூறியதைக்கேட்டுச், சடியரசன் மகிழ்ச்சி யடைந்தனன் என்க. அவன் - அவ்வச்சுவக்கிரீவனை. |