(இ - ள்.) பிடிகளை மகிழ் களிற்று அரசர் - பெண் யானைகளை மகிழ்விக்கின்ற ஆண் யானைகளையுடைய அரசர்கள், பெய்ம்மலர் முடிகளின் மணி பொர - பெய்யப்பட்ட மலர்களையுடைய முடிகளின் கண் பதித்துள்ள மணிகள் பணியும்போது தாக்குதலால், முரலும் மொய்கழல் - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த, அடிகளது அருளினால் - சுவாமிகளாகிய தங்களுடைய அருளால், அம்மென் சாயல் - அழகிய மென்மையையும் சாயலையுமுடைய, இக்கடிகமழ் குழலினாள் - மணங்கமழ்கின்ற கூந்தலையுடைய இந்தச் சுயம்பிரபை, கவினும் எய்தினாள் - அழகையும் அடைந்தாள் (எ - று.) |