(இ - ள்.) காரியம் துணிந்தவர் மொழிய - செயலினை மேற்கொண்டு இவ்வாறு செய்வோ மென்று உறுதி செய்தவராகிய அமைச்சர் மேற்கூறிய வாறு சொல்லவும், காவலன் - அரசன், மாரி அம் தடக்கையான் வருக என்று - முகில்போல் இரவலர்க்குக் கைம்மாறு கருதாது நன்கொடையினைப் பொழியும் பெரிய கைகளையுடையவனாகிய மருசி என்பவனையழைத்து, ஒரு சீரிய திருமுகம் சிறப்பொடு ஈந்தனன் - ஒரு சிறந்த முடங்கலைக் கொடுக்கப் பெறவேண்டிய சிறப்புக்களோடு கொடுத்தான், அவனும் - திருமுகத்தைப் பெற்றவனாகிய மருசியும் ஆரியன் கழலடி வாழ்த்தினான் - அரசனுடைய வீரக்கழல்களை யணிந்த அடிகளை நன்மொழி கூறிப்போற்றினான், (எ - று.) காவலன் - சடிமன்னன். கையானை வருக என்று அழைத்து என்க. சிறப்பு-தூதர்க்குச் செய்யும் சிறப்புக்கள். ஆரியன்-ஈண்டுச் சடிமன்னன். |