மல்லிகை முல்லை முதலிய கொடி வகைகளின் மாண்பு

434. வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மௌவல்
நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்
குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி
ஒளிர்கொடியன வுயர்திரளினொ டொழு 1கிணரன வோடை.
 

     (இ - ள்.) மல்லிகையொடு மௌவல் - மல்லிகையுடனே முல்லைகள்; வளர்கொடியன
- வளருகின்ற கொடியையுடையன; மணம் விரிவன - நறுமணம் உண்டாவன; நறவம் -
நறைக்கொடிகள், நளிர் கொடியன - குளிர்ச்சி பொருந்திய கொடிகளாக வளர்ந்துள்ளன;
நறுவிரை அகநறுமலரன - நறுமணத்தைத் தம்முட்கொண்ட நல்ல மலர்களையுடையன;
குழை மாதவி - குழைகின்ற குருக்கத்திகள், குளிர்கொடியன - குளிர்ச்சி மிக்க
கொடிகளாகப் படர்ந்துள்ளன; கொகுடி - முல்லைக்கொடி; குவிமுகையன - குவிந்த
மொட்டுக்களையுடையன; ஓடை - ஓடைக்கொடிகள்; உயர்திரளினொடு - சிறந்த
அடித்தண்டோடு; ஒளிர் கொடியன - விளங்குகின்ற கொடிகளாகப் படர்ந்துள்ளன; ஒழுகு
இணர்அன - மிகுந்த பூங்கொத்துக்களையும் உடையன (எ - று.)

மல்லிகை முதலிய செடிகொடிகள் இச்செய்யுளில் கூறப்பெறுகின்றன. ஓடை - ஒருகொடி.
கொகுடி செம்முல்லை என்பர். வளர்கொடி, நளிர்கொடி முதலியன வினைத்தொகைகள்.

( 4 )