451. 1அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும்
கலைத்தலை மலைத்து 2விரி கின்றகடி யல்குல்
முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பி3யுள முத்தம்
மலைத்தலை மயிற்கண மருட்டுமவர் சாயல்.
 

      (இ - ள்.) அவர் - அம்மகளிருடைய, அடித்தலம் - அடிகள்; அலத்தகம் -
செம்பஞ்சுக் குழம்பினை, மலைத்தன - தம்மியற்கை நிறத்தாலே வென்றன, கடி அல்குல் -
அம்மகளிரின் காவலமைந்த அல்குற்றடம், அரற்றும் - ஆரவாரிக்கின்ற, கலைத்தலை
மலைத்து - மேகலையிடத்தை வருத்தி, விரிகின்ற - விரியாநின்றன, முலைத்தலை -
அம்மகளிரின் முலையிடத்தே, முகிழ்த்து - தோன்றிய, ஒளி - இயற்கையொளியாலே,
முத்தம் - முத்து மாலைகள், துளும்பியுள - சுடர்மிக்குத் திகழ்ந்தன, சாயல் - அம்
மகளிரின் சாயலோவெனில், மலைத்தலை - மலையிடத்தே வாழும், மயிற்கணம் - மயிலின்
கூட்டத்தை, மருட்டும் - ஒக்கும், (எ - று.)

முகிழ்த்த என்றது ஈறுகெட்டு முகிழ்த்தொளி எனப்புணர்ந்தது. மயிற்கணம் மருட்டும் -
மயிற்கணமோ எனக் காண்போரை மருட்டும் என்க.

( 21 )