(இ - ள்.) கணங்கெழு கலாவம் ஒளிகாலும் - கூட்டமாகப் பொருந்திய மணிக்கோவையானது ஒளியைச் செய்யும், அகல் அல்குல் இடத்தாய் - அகன்ற அல்குலுக்கு மேலிடத்ததாகிய, சுணங்குஎழு - தேமல்பொருந்திய, தடத்துணை முலைச்சுமை - பெருத்த இரண்டாகிய கொங்கைச் சுமையினால், வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்கு - வளைந்தும் அசைந்தும் வருத்தத்தை யடைந்த இடைக்கு, இணங்கு துணையாய் - பொருந்திய துணையாகி, ஞிமிறு எழுந்து இரங்கின - வண்டுக் கூட்டங்கள் எழுந்து இரங்கினாற்போல ஒலித்தலைச் செய்தன, (எ - று.) இடையின் வருத்தங்கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க. |