மாதர்களின் மாட்சிமையை எண்ணி
மரீசி மகிழ்ந்திருத்தல்

472. வயந்த முன்னிய திலகைகல் லியாணிகை வடிவார்
வியந்த 1சேனைமென் கமலமா லதையென 2விளம்பும்
இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா
வயங்கு தொல்புக ழம்பர 3சரன்மகிழ்ந் திருந்தான்.
 

      (இ - ள்.) வயங்குதொல் புகழ் அம்பரசரன் - விளங்குகின்ற பழைமையான
சீர்த்தியையுடையவனும் விசும்பாறாகப் போக்கு வரவு செய்பவனுமாகிய மரீசியானவன்,
வயந்தமுன்னிய திலகை - வயந்தம் என்னும் பெயருக்கு முன்னாலே திலகை என்பது
சேரப்பெற்ற வயந்த திலகை, கல்லியாணிகை - கல்லியாணிகை, வடிவார் வியந்தசேனை -
அழகு பொருந்திய வியந்த சேனை, மென் கமலமாலதை - மென்மைத்தன்மை பொருந்திய
கமலமாலதை, எனவிளம்பும் - என்று சொல்லப்பெறும், இயங்கு பூங்கொடி அனையவர் -
அசைகின்ற பூங்கொடியைப் போன்றவர்களது, இயல்புகள் நினையா - அழகியதன்மைகளையெல்லாம் எண்ணிப்பார்த்து, மகிழ்ந்து இருந்தான்-களிப்புடன் அமர்ந்திருந்தான். (எ - று.)

மருசிக்குச் சிறப்புச் செய்தற்குவந்த மங்கையர்கட்குத் தலைவராயினார் பெயர் வயந்ததிலகை,
கல்லியாணிகை, வியந்தசேனை, கமலமாலதை என இப்பாட்டால் குறிப்பிடுகிறார். இவர்கள்
செய்யும் உபசாரத்தினை மருசி பார்த்து வியந்துமகிழ்ந்திருகின்றான் என்க.

( 42 )