விசயதிவிட்டர்களை நகரத்து மாதர்கள் காணுதல்

480. மாலைதாழு மாடவாய் நிலத்தகத்து மங்கைமார்
5வேலவாய நெடியகண் விலங்கிநின் றிலங்கலால்
சாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடை
நீலமாம லர்க்குழாநி ரந்தலர்ந்த நீரவே.
 

      (இ - ள்.) மாலை தாழும் மாடவாய் - மாலைகள் தொங்கவிடப்பெற்ற
உப்பரிகையமைந்த வீட்டிலே, நிலத்தகத்து - மேனிலத்திலே, சாலவாயில் எலாம் -
சாரளங்களின் வாயில்கள் எல்லாம், மங்கைமார் - மாதர்களின், வேல் அவாய நெடிய கண்
- வேற்படையை யொத்த நீண்ட கண்கள், விலங்கி நின்று இலங்கலால் - விட்டு விட்டு
ஒளி செய்து விளங்குதலால், ஓர் தாமரைத்தடத்திடை - ஒரு தாமரைத்
தடாகத்தினிடத்திலே, நீலமா மலர்க்குழாம் - கருங்குவளை என்னுஞ் சிறந்த மலர்க்
கூட்டங்கள், நிரந்து அலர்ந்த நீர - வரிசையாக மலர்ந்து விளங்குந் தன்மையைப் போலக்
காணப்பட்டன. (எ - று.) தாம் : அசை.

விசயதிவிட்டர்கள் பொழிலையடைதற்குத் தெருவழியாகச் செல்லுகின்றனர். அந்நகரத்து
மாதர்கள் மேனிலத்திலேயுள்ள பல கணி வழியாக அவர்களைப் பார்க்கின்றனர்.
அப்பலகணிகள் தாமரைத் தடாகத்தினிடையே கருங்குவளை மலர்க்கூட்டங்கள்
அடுக்கடுக்காக மலர்ந்திருக்கின்றாற் போலக் காணப்பெறுகின்றன.

( 50 )