481. சுண்ணமாரி தூவுவார் 1தொடர்ந்துசேர்ந்து தோழிமார்
வண்ண 2வார வளைதயங்கு முன்கைமேல்வ ணங்குவார்
நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் 3முன்னரே
கண்ணிதம்மி னென்றிரந்து 4கொண்டுநின்று கண்ணுவார்.
 

      (இ - ள்.) சுண்ணமாரி தூவுவார் - நறுமணப் பொடிகளை மழைபோல
இறைப்பார்கள், தொடர்ந்து சேர்ந்து - பின்பற்றிச் சென்று, தோழிமார் - தோழிப்
பெண்களுடைய, வண்ண ஆரவளை தயங்கு - அழகிய முத்துக்கள் பதித்துச் செய்யப்பெற்ற
வளையல்கள் விளங்குகின்ற, முன்கைமேல் வணங்குவார் - முன்கையினிடத்திலே
பணிவார்கள், நாண் ஒழிந்துசென்று நண்ணி - நாணமானது நீங்குமாறு போய், நம்பிமார்கள்
முன்னரே - விசய திவிட்டர்களுக்கு முன்பு, கண்ணி தம்மின் - நீங்கள் அணிந்துள்ள
மாலையைத் தாருங்கள், என்று இரந்துகொண்டு நின்று கண்ணுவார் - என்று கூறிக் கேட்டுக்கொண்டு நின்று பலவாறு எண்ணுவார்கள். (எ - று.)

விசயதிவிட்டராம் இளங்காளையரைக் கண்ட நங்கையரின் செயல் இச்செய்யுளாலும்
கூறப்பெறுகிறது. மங்கைமார் மாலையை இரத்தல் இதனில் கூறப்பட்டது.

( 51 )