484. அலத்தகக்கு ழம்புத1ம்ம டித்தலத்தொர் பாகமா
2நிலத்தலத்தொர் பாகமாக நீடுவாயில் கூடுவார்
3கலைத்தலைத்தொ டுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான்
மலைத்தலைத்த ழற் 4சிதர்ந்த போன்றமாட வாயெலாம்.
 

     (இ - ள்.) அலத்தகக் குழம்பு - தாம்பூசிக்கொண்டிருந்த செம்பஞ்சுக் குழம்பு,
அடித்தலத்து - தம் அடிகளின், ஒர்பாகமா - ஒருபாதி இருப்ப, ஓர் பாகம் - மற்றோர்
பாதி, நிலத்தலத்து ஆ - பூமியிடத்தனவாக, நீடுவாயில் - நீண்ட வாயிலிலே, கூடுவார் -
குழீஇய மகளிர்கள், கலைத்தலை - மேகலையிடத்தே, தொடுத்த கோவை - தொடுக்கப்பட்ட
மணிக்கோவை, கண்ணெகிழ்ந்து - இடநெகிழ்ந்தனவாய், சிந்தலான் - சிந்துதலாலே, மாடவா
யெலாம் - மாடங்களிடமெல்லாம், மலைத்தலை - மலையிடத்தே, தழல் சிதர்ந்த -
தீப்பொறிகள் சிதறினதை, போன்ற - ஒப்பாயின. (எ - று.)

அலத்தகம் ஊட்டிய மகளிர் அஃது உலருமுன் புறப்பட்டனராகலின் அக்குழம்பில் ஒருபாதி
நிலத்திலே ஒட்டிக்கொண்டது; ஒரு பாதி மட்டுமே அடிகளிற் காணப்பட்டது என்றவாறு.
இஃது அம் மகளிரின் விரைவினை உணர்த்திற்று.

( 54 )