(இ - ள்.) செம்முகப் பசும்பொன் ஓடை - செம்புள்ளிகளையுடைய முகத்திலே பசும்பொன்னாற் செய்யப்பட்ட பட்டத்தையும், வெண் மருப்பு இணை - வெள்ளிய இரண்டு தந்தங்களையும், கருமுகத்து - கரிய முகத்திலே, வெம்வீழ் - வெம்மையாகப் பெருகுகின்ற, கடாத்து - மதநீரையும் உடைய, வேழம் நின்று இழிந்த பின் - யானையினின்றும் விசய திவிட்டர்கள் இறங்கிய பிற்பாடு, கைம்முகத்து - கையினிடத்திலே, வேல் இலங்கு - வேற்படை விளங்கப்பெற்ற, காமர் தாம் கொல் என்று - காமர்கள் இவர்கள் தாமோ என்று மயங்கி, சென்று - அவர்களைநெருங்கி, அம்முகத்த தும்பி - அழகிய முகத்தையுடைய தும்பிகளும், வண்டு - வண்டுகளும், தேனொடு - தேன்களுடனே, ஆடி ஆர்த்த - ஆடிக்கொண்டு ஒலி செய்தன. (எ - று.) விசயதிவிட்டர்கள் யானையினின்று இறங்கியபோது வண்டுக் கூட்டங்கள் ஆரவாரித்தன என்க. வண்டுகள் இசையைக்கொண்ட முகத்தையுடைமையால் 'அம்முகத்த தும்பிவண்டு' என்றார். |