நீர் எம்மை வணங்குவது ஏன் என்று விசயன்
மரீசியைக் கேட்டல்

496. ஆங்கவனி றைஞ்சலு மலர்ந்ததிங்க 1ணீளொளிப்
பூங்கழற்பொ லங்குழைப்பொ லிந்திலங்கு 2தாரினான்
நீங்கருங்3கு ணத்தினீவிர் நீடுகுரவ ராதலில்
ஈங்கெமக்கு நீர்பணித்த தென்னையென்றி யம்பினான்.
 

     (இ - ள்.) ஆங்கு - அவ்வாறு, அவன் இறைஞ்சலும் - அந்த விஞ்சையன்
வணங்கியவுடனே, மலர்ந்த திங்கள் நீள் ஒளி - தோன்றிய திங்களினுடைய வெள்ளிய
ஒளியும், பூங்கழல் - பொலிவுபெற்ற வீரக்கழலும், பொலங்குழை - பொன்னினால் ஆகிய
காதணியும், பொலிந்து இலங்குதாரினான் அமையப்பெற்று விளங்குபவனாகிய மாலையை
அணிந்த விசயனானவன், மரீசியைப்பார்த்து; நீங்க அரும் குணத்தின் நீவிர் -
நீங்குதலில்லாத நல்ல குணத்தையுடைய நீர், நீடு குரவர் ஆதலில் - எமக்கு நீண்ட
பெருமையையுடைய ஆசிரியரைப் போன்றவர் ஆகையால், ஈங்கு - இப்பொழுது, எமக்கு
நீர்பணிந்தது என்னை - எங்களை நோக்கி நீர் வணங்கியது யாது காரணம்பற்றி?, என்று
இயம்பினான் - என்று கேட்டான் (எ - று.)
எம்மினும் மேம்பட்டவராகிய நீவிர் எம்மை வணங்கியது எக்கார ணத்தினால் என்று
விசயன் மருசியைப்பார்த்துக் கேட்கின்றனன் என்க.

( 66 )