மேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்

498. வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன்1வி யந்துநீள்
நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்கலன்
கால்கள்கொண்டு 2கண்ணிகாறு முண்மகிழ்ந்து 3கண்டுகண்
மால்கொள்சிந்தை 4யார்கள்போல மற்றுமற்று நோக்கினான்.
 

     (இ - ள்.) விஞ்சையன - மரீசியானவன, நீளநூல்கொள் சிந்தை - பெரிய
நூல்களிலே சென்று அறிந்த தன்மனமும், கண்கள் தாவ - தன் கண்களும் அவர்
மேற்படரா நிற்ப, வேல் கொள் தானை வீரர் தம்மை - வேற்படையைக் கையிற்கொண்ட
படைவீரர்களான விசயதிவிட்டர்களை, வியந்து நோக்கி நோக்கி ஆர்கலன் -
வியப்படைந்து பன்முறையும் பார்த்தும் மனநிறைவு கொள்ளாதவனாகி, உள்மகிழ்ந்து -
மனதிற்குள்ளே களிப்படைந்து, கால்கள் கொண்டு கண்ணிகாறும் - அடிகள் முதற் கொண்டு
முடிமாலை வரையினும், கண்கண்டு - கண்களாற் பார்த்து, மால்கொள் சிந்தையார்கள்போல
- பித்தரைப்போன்று, மற்றும் மற்றும் நோக்கினான் - மேன்மேலும் பார்த்தான், (எ - று.)

மருசியானவன் விசயதிவிட்டர்களைப் பன்முறை கண்டும் மன நிறைவு கொள்ளாதவனாய்
உள்ளத்தை ஒருவழிப்படுத்தி அடிமுதல் முடிவரையிலும் மீண்டும் மீண்டும்
நோக்கியவண்ணமே யிருந்தனன் என்க. உடலிலக்கண நூன் முறைப்படி விசயதிவிட்டர்கள்
அமைந்து விளங்கும் சிறப்பு மருசிக்கு, மகிழ்ச்சியளித்த தாதலின் மேன்மேலும்
பார்க்கலாயினான்.

( 68 )