மருசியும் விசய திவிட்டர்களும் யானைகள்மீது
தனித்தனியே அரண்மனைக்குப் புறப்படுதல்

503. அம்பொன்மாலை கண்1கவர்ந்த லர்ந்தசெல்வ 2வெள்ளமேய்
வெம்புமால்க ளிற்றெருத்தம் 3விஞ்சையாளன் மேல்கொளப்
பைம்பொன்மாலை வார்மதப்ப ரூஉக்கை4யீரு வாக்கண்மீச்
செம்பொன்மாலை மார்பர்சேர்ந்து தேவரிற்று ளும்பினார்.

 

     (இ - ள்.) விஞ்சையாளன் - மருசியானவன், அம்பொன்மாலை - அழகிய
பொன்னரிமாலை, கண்கவர்ந்து - கண்ணைப் பறித்துக்கொண்டு, அலர்ந்த - விளங்கிய
தன்மையமைந்ததும், செல்வ வெள்ளம் ஏய் - செல்வப் பெருக்கின் மிகுதியை ஒத்ததுமாகிய, வெம்பும் மால்களிற்று எருத்தம் மேல்கொள - சினக்கும் தன்மையுள்ள பெரிய யானையின்
பிடரியின்மேல் ஏறிக்கொண்டு புறப்பட, பைம்பொன்மாலை - பசும்பொன்னினாலாகிய
மாலையணிந்தனவும், வார்மதம் - மிகுந்த மதத்தையுடையனவும், பரூஉக்கை -
பெருத்தகைகளையுடையவுமான, ஈர் உவாக்கள்மீ - இரண்டு அரசயானைகளின்மேல்,
செம்பொன்மாலை மார்பர் சேர்ந்து - செம்பொன்னினாலாகிய மாலையைப் பூண்டவர்களான
விசயதிவிட்டர்கள் ஏறி, தேவரில் துளும்பினார் - தேவர்களைப் போன்ற தோற்றத்துடன்
விளங்கினார்கள். (எ - று.)

யானை மிகுந்த விலைமதிப்புடைய தாகலின் “செல்வ வெள்ளமேய் களிறு“ என்றார். மருசி
ஒரு யானையின்மீது புறப்பட விசய திவிட்டர்களும் தனித்தனியே ஒவ்வொரு
யானையின்மீது தேவர்களைப்போன்ற தோற்றத்துடன் புறப்பட்டார்கள்.

( 73 )