அரண்மனையின் வாயிலை அடைதல்

507. தெளிர்முத்த மணலுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சிதர்ந்துதீந்தேன்
1தளிாமுத்த மலரும் போதும் சாந்தமு முழக்கி வண்டார்
2ஒளிர்முத்த முறுவ லார்த முழைக்கலங் கலந்து மாலைக்
குளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்கடை குறுகச் சென்றார்.
 

     (இ - ள்.) தெளிர்முத்த மணலும் - ஒளி விளங்குகின்ற முத்துக்களாகிய மணலும்,
செம்பொன் சுண்ணமும் - செம்பொன்னின் நிறமான நறுமணச் சுண்ணமும், சிதர்ந்து -
சிதறப்பெற்றும், தளிர் - தளிரோடு கூடிய, தீம்தேன் - இனிய தேனையுடைய, முத்தம்
மலரும் - முத்துப்போல் வெண்ணிறமான மலர்களும், போதும் - மலரும் பருவத்தரும்பும்,
சாந்தமும் - சந்தனமும், உழக்கி - ஒன்றாகச் சேறுபோலக் கலக்கப்பெற்றும், வண்டு ஆர் - வளையல் பொருந்திய, ஒளிர்முத்தம் முறுவலார் தம் - விளங்குகின்ற முத்துப்போன்ற
பற்களையுடையவரான பெண்களின், உழைக்கலம் - உழைக்கலங்கள், கலந்து சேரப்பெற்றும், மாலை - மாலையாகத் தொங்கவிடப்பெற்ற, குளிர் முத்தம் - குளிர்ந்த முத்துக்கள்,
நிழற்றும் - ஒளி விடப்பெற்றும் உள்ள கோயில் அரண்மனையின், பெருங்கடை - பெரிய வாசலில், குறுகச் சென்றார் - அணித்தாகச் சென்றார்கள். (எ - று.)

முத்தமணலும் செம்பொற் சுண்ணமும் சிதறிப் பூக்களுடனே அரும்பு களும் சந்தனமும்
பெய்யப்பெற்றிருப்பதால் அவைகள் குழம்பாகப்பெற்று முத்தமாலை தொங்கவிடப்
பெற்றுள்ள அரண்மனைப் பெருவாயிலை மருசியும் விசயதிவிட்டர்களும் குறுகினர் என்க.
போது - மலரும் பருவத்து அரும்பு என்பர்.

( 77 )