மன்னவன் விஞ்சையனுக்கு முகமன் கூறியிருத்தல்

511. அலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கி
உலகுப சார மாற்ற முரைத்தலுக் குரிய கூறி
விலகிய கதிர வாகி விளங்கொளிக் கடகக் கையான்
மலரங் 3கழுமப் போந்து மனமகிழ்ந் திருந்த போழ்தின்.
 

     (இ - ள்.) அலகைஇல் தானை வேந்தன் - அளவிடப்படாத படையை உடைய
பயாபதி மன்னன், அம்பரசரனை நோக்கி - விண்ணில் இயங்குபவனாகிய மருசியைப்
பார்த்து உலகு உபசாரம் மாற்றம் - உலகோர் கூறும் வரவேற்பு மொழிகளுள்,
உரைத்தலுக்கு உரிய கூறி - அரசனாகிய தான் சொல்வதற்கேற்ற மொழிகளைச் சொல்லி (வரவேற்றான்;) விலகிய கதிர ஆகி - விட்டு விட்டு விளங்குகின்ற ஒளியை உடையனவாய், விளங்கு ஒளிக் கடகக் கையான் - விளங்குகின்ற ஒளியினையுடைய கடகங்களையணிந்த கையினையுடைய மருசியானவன், மலர் அகம் கழும மோந்து - தான் கைப்பற்றியுள்ள மலரை உள்ளங்குளிர மோந்துகொண்டு, மனம்மகிழ்ந்து இருந்த போழ்தில் - மனமகிழ்ச்சியோடு இருந்த சமயத்தில், (எ - று.)

விஞ்சையன் எழுந்து ஓலைகாட்ட என்று அடுத்த செய்யுளோடு இயையும்; இதுமுதல்
மூன்றுபாடல்கள் குளகம். விலகிய கதிரவாகி விளங்கொளிக் கடகக்கையான் என்பதைப்
பயாபதி மன்னனுக்குக் கொண்டு கூட்டிப் பொருளுரைப்பி்னும் அமையும். மருசி
மனமகிழ்ந்திருத்தற்குக் காரணம் பயாபதி மன்னன் செய்யும் உபசாரமாகும்.

( 81 )