(இ - ள்.) நாந்தகக் கிழவர்கோவே - வாட்படைகொண்டு தொழில் புரியும் மன்னர்கட்கெல்லாம் மன்னனே!, வேய்ந்து அகம் நிழற்றும் கோதை - அணியப்பட்டு அவ்விடத்தில் ஒளி விடுகின்ற மாலைபோன்று, மிளிர்மணி கலாபவட்டம் - விளங்குகின்ற மணிகள் அழுத்திய வட்டமாகிய கலாபத்தையும், போந்து - பொருந்தி, அகம்திகழ்ந்து மின்னு - தன்னிடத்து விளங்கி ஒளி விடுகின்ற, பூந்துகில் பொலிந்த அல்குல் - அழகிய ஆடைக் குள்ளே விளங்குகின்ற அல்குலையுடையவளும், ஆய்ந்து அகம்கமழும் கோதை - நுணுகித் தன்னிடமெல்லாம் நறுமணம் வீசுகின்ற மாலையினை அணிந்தவளுமாகிய, அவள் பெற்ற அரச சிங்கம் - அந்தச் சுதஞ்சனை என்பவள் ஈன்ற சிறந்த அரசன், நலத்தின் மிக்கான் - நல்லியல்பில் மிகுந்தவனாகிய, நமி என்பான் - நமி என்று சொல்லப்பெறுபவன், (எ - று.) கச்சன் என்பவனுக்குச் சுதஞ்சனை என்னும் மனைவியிடம் தோன்றியவன் நமி. கலாபம் - மாதர் இடையணியுள் ஒன்று. அது பதினாறு கோவையுள்ளது. |