(இ - ள்.) வென்ற பெருமானே - வினைகளை வென்ற பெருமையை யுடையவனே!, நிறைதரு கேவலத்தோய் - நிரம்பியுள்ள கேவலஞானம் உடையவனே!, நின் அடியார்க்கு எல்லாம் - உன்னுடைய அடியவர்களுக் கெல்லாம், குறைதல் இல் - குறைதல் இல்லாத, இன்பம் கொடுப்பாயும் நீயே - வீடுபேற்றின்பத்தைக் கொடுப்பவனும் நீதான், கொடுப்பாயும் நீயே - அடியவர்கட்குக் குறைதலில்லாத இன்பத்தைக் கொடுப்பவனாகவிருந்தும், எம்குற்றவேல் வேண்டாய் - எம்முடைய சிறிய ஏவல் தொழிலை விரும்பாமல், விடுத்தாயும் - விட்டுவிட்டவனும், நீத்தாயும் நீயே - எல்லாவற்றயும் துறந்தவனாயிருப்பவனும் நீயேதான், (எ - று.) தன் அடியவர்கட்கு அருகக்கடவுள் குறைதலில்லாத இன்பத்தைக் கொடுப்பவனாக இருந்தும் அவன் எல்லாவற்றிலும் நிரம்பியவனாதலால் தன் அடியவர்களிடத்தில் குற்றேவலை எதிர்பாராமல் இருக்கிறான் என்றார். அவன் அவ்வாறிருத்தல் எல்லாவற்றையும் துறந்தவனாக இருத்தலால்தான் என்று காரணத்தையும் விளக்கினார். வேண்டாய் : முற்றெச்சம். |