நமியரசன் விடையிறுத்தல்

547. பண்மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத்
1துண்மிசைத் தொடர்பு நோக்கி 2யுறுவலி யதனைக் 3கேளா
விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ
மண்மிசைப் பெறுவ 4னாக மற்றிதென் மனத்த தென்றான்.
 

      (இ - ள்.) உறுவலி - மிகுந்த ஆற்றலமைந்த நமியரசன், அதனை கேளா - அந்த
ஆதிசேடன் சொன்னதைக் கேட்டு, மாற்றத்து - ஆதிசேட னுடைய மொழியினால்,
உள்மிசை தொடர்பு நோக்கி - அந்த ஆதிசேட னுடைய மனதிலே ஏற்பட்டிருக்கும்
பற்றுதலைப் பார்த்து, பண்மிசை படர்ந்த சிந்தை - இசையின்மீது சென்ற
கருத்தினையுடைய, பணதான் பணிந்து - ஆதிசேடனை வணங்கி, விண்மிசையவர்கள்போல
- தேவருலகத்தில் இருக்கின்ற தேவர்களைப்போல, வேண்டிய விளைக்கும் செல்வம் -
விரும்பியவற்றை உண்டாக்கவல்ல செல்வத்தை, மண்மிசை - இந்த நிலவுலகின்மேல்,
பெறுவன் ஆக - நான் பெறுபவன் ஆகுக, இது என் மனத்தது என்றான் - இதுவே
என்னுடைய உள்ளத்திலே இருக்கின்ற விருப்பமாகும் என்று நமியரசன் தெரிவித்தான்,
(எ - று.)

தான் விரும்பியதைத் தருதற்கு, ஆதிசேடன் விருப்பத்தோடு தன்னை வினாவுகின்றான்
என்றுணர்ந்த நமியரசன் ஆதிசேடனைப் பணிந்து,

தேவர்களுடைய இன்பவாழ்க்கைச் செல்வம் தனக்கு இந்த நிலவுலகத்தில் வேண்டும் என்று
தெரியப்படுத்திக் கொள்ளுகிறான். பாம்புகள் இசைச் சுவையை நன்கு உணரும்
ஆற்றலமைந்தவைகள்; அதற்கு ஏற்ப ஈண்டு, 'பண்மிசைப்படர்ந்த சிந்தைப் பணதரன்,
என்றார்.

( 117 )