(இ - ள்.) புண்ணியக்கிழவன் - நல்வினைக்கு உரிமையுடையவனாகிய அந்த வாகுவலி மன்னன், விண்உயர் விளங்கு கோட்டு - வானிலே உயர்ந்து விளங்குகின்ற முடிகளையுடையதும் விடுசுடர் விளங்கமாட்டா - உலகத்திற்கு ஒளியைக் கொடுக்கிற ஞாயிறு திங்கள் விண்மீன் ஆகியவைகள் தன் னொளிக்கு முன்னே விளங்கமாட்டாததும், கண்உயர் கதலி வேலி - கண்ணுக்கு உயர்ந்து தோன்றுகிற கதலிவனத்தை வேலியாகவுடையதும், கார் - முகில் தவழப்பட்டதுமாகிய, கயிலாய நெற்றி - கயிலாயமலையின் முடிக்கு, போகி - போய், பொலம் கலம்புலம்ப நீக்கி - பொன்னினால் இயன்ற அணிகலன்கள் ஒலிக்குமாறு களைந்து அகற்றிவிட்டு, திண்ணிய தியானம் செந்தீ - உறுதியாகிய தவத்தினால் ஆன செவ்விய தீயின், செஞ்சுடர் திகழநின்றான்-செந்நிறஒளி விளங்குமாறு தவத்திலே ஊன்றியிருந்தான், (எ-று.) வாகுவலிமன்னன் கைலாயமலையின் முடிக்குச்சென்று அணிகலன் களை அகற்றிவிட்டுத் தவத்தினால் ஒளியுண்டாகுமாறு அமைந்து நின்றான், நல்வினையில் மிகுதியாக ஈடுபட்டிருந்தமையின் வாகுவலி, 'புண்ணியக் கிழவன்' என்னப்பெற்றான், |