558. அடுக்கிய வனிச்சப் பூவி னமளிமே லரத்தச் செவ்வாய்
வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளைக்கையால் வளைத்தமார்பில்
தொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர்
கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப்பட்டான்.
 

     (இ - ள்.) அடுக்கிய - ஒழுங்குற அடுக்கப்பட்ட, அனிச்சப்பூவின் அமளிமேல் -
மெல்லிய அனிச்சமலராலாய படுக்கையின் மேலே, அரத்தச் செவ்வாய் - குருதிபோலச்
சிவந்த வாயினையுடையவரும், வடிகயல் நெடுங்கணர்தம் - மாவடுப்பிளவினையும்
கயல்மீனையும் ஒத்த நெடிய கண்களையுடையவரும் ஆகிய மகளிருடைய, வளைக்கையால்
- வளையலணிந்த கைகளாலே, வளைத்த மார்பில் - தழிஇ வளைக்கப்பட்ட
மார்பினிடத்தே, தொடுக்கிய தொடுத்த போலும் - பூந்தொடையலாகத் தொடுக்கக் கருதிப்
பூமாலை தொடுப்போராற் றொடுக்கப்பட்ட மாலையைப் போன்று, துறுமலர்கத்திமாதர் -
செறிந்து நிரல்பட்ட மலரையுடைய குருக்கத்தி யாகிய மகளிர், கொடிக்கையால் -
அழகிய தமது கொடிகளாகிய கைகளாலே, இடுக்கல் - தழுவுதலை, கொற்றவன் -
வாகுவலிமன்னன், தன்மேல் குலவப் பட்டான் - தனது உடலின்மிசைப்
பொருந்தப்பெற்றான், (எ - று.)
கொற்றவன் : வாகுவலி.

( 128 )