வாகுவலி கச்சனுக்கு மருகன் என்று கூறுதல்

563. இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை
அப்படி யரிய செய்த வடிகளெம்
1மரச னாய
கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென்
றொப்புடைப் புராண நன்னூ
2லுரைப்பதியா னறிவ னென்றான்.

     (இ - ள்.) இப்படித்து ஆயின் - குலவரலாறு இவ்வாறாக இருக்கு மானால், சுற்றம் -
இருகுலத்துக்கும் உறவு முறைத்தன்மை, பண்டை இசைந்தது - முன்னரே அமைந்து
நின்றது, என்னை - அஃதெவ்வாறெனின், அப்படி அரிய செய்த அடிகள் - அவ்வாறு
அருமையான தவத்தைச் செய்த பெரியோன், எம் அரசன் ஆய - எம்முடைய அரசனான,
கைபுடை இலங்கு செவ்வேல் - கையினிடத்து விளங்குகிற செவ்விய வேலையுடைய,
கச்சற்கு - கச்சனென்பானுக்கு, மருகனார் என்று - உடன் பிறந்தாள் மகன் என்று, ஒப்பு
உடை - செய்திகளை ஒப்பச் சொல்லுதலையுடைய, புராண நன்னூல் உரைப்பது - சிறந்த
புராண நூலிற் சொல்வதை, யான் அறிவன் என்றான் - நான் உணர்வேன் என்று
சொன்னான், (எ - று.)

கச்சன் என்று கழறப்பெற்றவனுக்கு, வாகுவலி என்பானை மருகன் என்று எம்முடைய
புராண நூலில் கூறியிருத்தலால் இருகுலத்தார்க்கும் உறவுமுறை முன்னரே அமைந்து
கிடந்தது என்று மருசி குறிப்பிட்டான். அத்தைமகனை மருகன் என்றலும் உண்டு. பண்டை
- ஐயீற்றுடைக் குற்றுகரம்.

( 133 )