579. அள்ளி-லைச்செழும் பலவி னார்சுளை
முள்ளு டைக்கனி 2முறுகி விண்டெனக்
கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா
வள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும்.
 
 

      (இ - ள்.) அள் இலை செழும் பலவின் - செறிந்த இலைகளாற் றழைத்த
பலாமரத்தினது, ஆர் சுளை - நிரம்பிய சுளைகளையும், முள் - புறந்தோலின்கண்
முட்களையும், உடைக்கனி - உடைய பழம் முறுகி - முதிர்ந்து, விண்டு என -
வெடித்தனவாக அவை, கள் உறைத்தொறும் - தேனை இடையறாது துளித்தலால், கழுமி -
அத்தேன் பெருகி, ஊற்றறா - அருவியாகப் பாய்தலை ஒழியாத, வள்ளிலைப் பொழில் -
வளமிக்க இலைகளாற் செறிந்த புட்பமாகரண்டம் என்னும் பூம்பொழிலின்கண், மகிழ்ந்து -
மனமகிழ்ச்சிகொண்டு, புக்கதும் - புகுந்த செய்தியும், (எ - று.)

ஆர்சுளை - பொருந்தியசுளை எனினுமாம். முறுகி விண்ட பலாக் கனி மிகுதியாகத்
தேன்றுளித்தலால் என்க. பொறிகளுக்குப் பேரின்பததைப் பொழில் நல்கியதாகலின்
மகிழ்ந்து புக்கதும், என்றான்,

( 7 )