580. 1முள்ள 2ரைப்பசு முளரி யந்தடத்
துள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம்
கள்ளி ரைத்துகக் கண்டு 3வண்சிறைப்
புள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும்.
 

     (இ - ள்.) முள் அரைப் பசு முளரி - முள் நிறைந்த நாளங்களை யுடைய பசிய
நிறமமைந்த தாமரை அடர்ந்த, அம்தடத்துள் - அழகிய குளத்தினுள்ளே, இரைந்து எழும்
ஒலி செய் வண்டு இனம் - ஒய் எனும் இரைச்சல் உண்டாம்படி எழுந்து இசைபாடுதலைச்
செய்கின்ற பலவகை வண்டுகளும், கள் இரைத்து உகக் கண்டு - அங்ஙனம் எழுந்தோறும்
ஓசையுடனே தேன் துளிப்ப அத்தேன் ஒழுகுதலைப் பார்த்து, வண் சிறைப்புள் - வளமிக்க
சிறகுகளையுடைய பறவைக் குழாங்கள், இரைப்பதோர் - மகிழ்ச்சியாலே ஆரவாரித்தற்கு இடமாகவுள்ள ஒரு, பொய்கை சார்ந்ததும் - குளத்தின் பக்கத்தே சென்றதும், (எ - று.)
தம் சிறகுகளினின்றும் தேன்றுளிக்க ஒய் யென்றிரைந்தெழும் வண்டினங்களைக் கண்டு பறவைகள் மகிழ்ச்சியால் ஆரவாரித்தன என்க.
 

( 8 )