585. 1பங்க யத்தலர்ச் செங்கண் மாமுடித்
திங்கள் வண்ணனுஞ் செம்போ னீள்குழைப்
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும்
அங்கு வந்தது மவர்கள் சொற்றதும்.
 
 

      (இ - ள்.) பங்கயத்து அலர் செங்கண் - செந்தாமரை மலர் போன்ற சிவந்த
கண்களையும், மாமுடி - சிறந்த முடியையும் உடைய, திங்கள் வண்ணனும் -
திங்களைப்போன்ற வெண்ணிறம் படைத்த விசயனும், செம்பொன் நீள்குழை - செந்நிறப்
பொன்னாலாகிய நீண்ட குண்டலங்களை அணிந்தவனும், பொங்கு வெண் திரை புணரி
வண்ணனும் - பொங்குகின்ற வெள்ளிய அலைகளை எறியும் கடலின் நிறத்தை
உடையவனுமாகிய திவிட்டனும், அங்கு வந்ததும் - அவ்விடத்தை அடைந்த செய்யும்,
அவர்கள் -அவ்விசய திவிட்டர்கள், சொற்றதும்-தனக்குச் சொன்ன மொழிகளும், (எ-று.)

     திங்கள் வண்ணனும், புணரி வண்ணனும் அப் பொழிலிடத்தே வந்து தன்னைக்
கண்டு கூறிய முகமன் மொழிகளையும், (கூறினான் என்க.),

( 13 )