587. மன்ன வன்கழல் வணங்கி நின்றதும்
3பின்ன வன்றனா லிருக்கை பெற்றதும்
பொன்னி றப்பொறி பிகழ்ந்த சாதகந்
துன்னி வாசகந் தொழுது கொண்டதும்.
 
 

      (இ - ள்.) மன்னவன் கழல் - பயாபதி வேந்தனுடைய வெற்றிக்கழல ணிந்த
அடிகளை, வணங்கி நின்றதும் - வணக்கம் செய்து அவன் திருமுன் நின்றதும், பின்
அவன்தனால் - அதன் பிறகு அவ்வேந்தனுடைய அருளால், இருக்கை பெற்றதும் - தன்
தகுதிக்கேற்ப ஆதனத்தின்கண் இனிதின் அமர்ந்ததும், பொன்னிறப்பொறி - பொன்மயமான
இலச்சினை யிடப்பட்டதும், புகழ்ந்த - சொல்லழகு பொருளழகு முதலிய திருமுக
விலக்கணங்களால் நிறைந்து அறிஞர்களால் புகழப்பட்டதுமாகிய, சாதகம் - திருமுடங்கலை,
தொழுது துன்னி - கைகூப்பித்தொழுது அதன்கண் மனத்தால் நெருங்கி, வாசகம்
கொண்டதும் - அதன்கட் பொறித்துள்ள மொழிகளை விழிப்புடன் ஓதுவித்து
அறிந்துகொண்டதும், (எ - று.)

     சாதகம் - செய்துமுடித்தது என்னும் பொருட்டு. துன்னுதல் - விழிப்புடன்
பொருளுணர்தல். அரசவை அடைந்து பயாபதியை வணங்கியதும், அம் மன்னனால்
இருக்கை பெற்றதும் பின்னர்த் திருவோலையைத் தான் அவனுக்கீந்ததும் அவன் அதனை
நனகுமதித்து ஓதுவித்துணர்ந்ததும் ஆகிய செய்திகளையும் (கூறினான் என்க.)

( 15 )