588. ஓட்டி றானையா னோலை வாசகங்
கேட்ட 1மன்னவன் கிளர்ந்த 2சோதியன்
மீட்டொர் 3பொற்கொடா விம்மி தத்தனா
யீட்டு 4மோனியா யிருந்த பெற்றியும்.
 

     (இ - ள்.) ஓலை வாசகம் கேட்ட - ஓலையின்கண் பொறித்துள்ள செய்திகளைக்
கேட்டறிந்த, ஓட்டுஇல் தானையான் - பகைப்புலத்துப் புறங்கொடுத்து ஓடாத வீறுடைய
படையுடையவனாகிய, மன்னவன் - பயாபதி அரசன், கிளர்ந்த சோதியன் - (அகத்தழகு
முகத்துத் தோன்றுதலின்) கிளர்ந்தெழுந்த முகவொளியுடையனாய், மீட்டொர் சொல்கொடா
- மறுமொழியாக ஒரு சொல்லேனும் சொல்ல வியலாமைக்குக் காரணமான, விம்மிதத்தனாய்
- மருட்கையுடையவனாய், ஈட்டு மோனியாய் - பெருமையுடைய மௌனத்தையுடையவனாய்,
இருந்த பெற்றியும் - இருந்ததன்மையும், (எ - று.)

     ஈட்டுமோனி - பெருமையுடைய மோனி. ஈடு - பெருமை. ஓடாத தானை வேந்தன்
ஓலை வாசகம் கேட்டு உளநிறைந்த மகிழ்ச்சியுடையனாய் மருண்டு வாய்வாளா விருந்ததும்
(கூறினான் என்க.)
 

( 16 )