(இ - ள்.) ஓலை வாசகம் கேட்ட - ஓலையின்கண் பொறித்துள்ள செய்திகளைக் கேட்டறிந்த, ஓட்டுஇல் தானையான் - பகைப்புலத்துப் புறங்கொடுத்து ஓடாத வீறுடைய படையுடையவனாகிய, மன்னவன் - பயாபதி அரசன், கிளர்ந்த சோதியன் - (அகத்தழகு முகத்துத் தோன்றுதலின்) கிளர்ந்தெழுந்த முகவொளியுடையனாய், மீட்டொர் சொல்கொடா - மறுமொழியாக ஒரு சொல்லேனும் சொல்ல வியலாமைக்குக் காரணமான, விம்மிதத்தனாய் - மருட்கையுடையவனாய், ஈட்டு மோனியாய் - பெருமையுடைய மௌனத்தையுடையவனாய், இருந்த பெற்றியும் - இருந்ததன்மையும், (எ - று.) ஈட்டுமோனி - பெருமையுடைய மோனி. ஈடு - பெருமை. ஓடாத தானை வேந்தன் ஓலை வாசகம் கேட்டு உளநிறைந்த மகிழ்ச்சியுடையனாய் மருண்டு வாய்வாளா விருந்ததும் (கூறினான் என்க.) |