(இ - ள்.) செய்ய கோலினாய் - செங்கோன் முறை தவறாத அரசனே; ஐயதாரினான் - அழகிய மாலையணிந்த பயாபதி மன்னன், வையம் இன்புறின் - தன்குடை நீழல் வாழ்வோர் இன்பம் எய்தும்பொழுது, தானும் இன்புறும் - அவர்கள் எய்திய இன்பத்தைத் தான் எய்தியதாக எண்ணிமகிழு வான், வெய்யது ஒன்றுறின் - அங்ஙனமின்றி அவர் யாதானுமொரு துன்பத்தை எய்தியபொழுது, தானும் வெய்துறும் - அது பொறானாய்த்தானும் துன்புறுவான், மன்னன் அருளின் வண்ணம் ஏ - செங்கோன் மன்னனாகிய பயாபதியின் அருட்பெருமை, செப்பலாவது அன்று - இங்ஙனமாகலின் இயம்பும் எளிமைத்தன்று (எ - று.) பயாபதி மன்னுயிரெல்லாம் தன்னுயிர் எனக் கொள்ளும் தண்ணருள் மிக்கான் ஆகலின், அவன் குடைநீழல் வாழ்வார் தம் மூழ்வழி வெய்துறுங்காற றானும் வெய்துறும் இன்புறுங்காற் றானும் இன்புறும் என்றான் என்க. |