(இ - ள்.) மாவல் தானை அம்மன்னர் மன்னன் - யானைப் படை குதிரைப் படைகளால் மிக்க வலிமை பொருந்திய அந்த அரசர்க்கரசனாகிய பயாபதி, வீவு இல் வீங்கு நீர்வேலி - அழிதலில்லாத கடல்களை வேலியாகவுடைய உலகின்கண், வாழ்பவர்க்கு - வாழுகின்ற உயிர்கட்கு, அரசர் ஆவி ஆபவர் - மன்னர் உயிர் ஆவர், ஆதலால் - என்று கூறப்படுதலால், காவல் ஓவும்கொல் - தனது சோர்வினால் தன் கடமையாகிய காவற்றொழில் ஒழிந்துபடுமோ, என்று - என்று ஐயமுற்று, கண்படான் - உறங்காது விழித்திருப்பான், (எ - று.) “கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும் கோணிலை திரிந்திடன் மாரிவறங் கூரும் மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிர் என்னும் தகுதிஇன் றாகும்“ என்பது மணிமேகலை. |