601. கைய வாச்சிலைக் காம னிங்கிரு
மெய்யி னால்வெளிப் பட்ட நீரதால்
வைய மாள்பவன் புதல்வர் வார்கழ
லையன் மார்கடம் மழகின் வண்ணமே.
 

     (இ - ள்.) வையம் ஆள்பவன் புதல்வர் - உலகத்தை ஆட்சி செய்கின்ற பயாபதி
மன்னனுடைய மைந்தர்களாகிய, வார்கழல் ஐயன்மார்கள் தம் - நீண்ட வீரக்கழலணிந்த
விசயதிவிட்டர்களுடைய, அழகின் வண்ணம் - அழகினது தன்மை, (எத்தகையதெனில்?) கை
அவாசிலை காமன் - கையின் கண் அவாவுதற்குக் காரணமான கரும்பு வில்லையுடைய
மன்மதன், இங்கு இரு மெய்யினால் - இம்மண்ணுலகத்தே (விசய திவிட்டருடைய)
இரண்டுடம் புகளின் வாயிலாய், வெளிப்பட்ட நீரது - உலகோர் கண்காணத் தோன்றிய
தொரு நீர்மையை உடைத்து, (எ - று.)

     அழகின் வண்ணம் காமன் வெளிப்பட்ட நீரது என்க. உருவமில்லாத காமவேள்
இரண்டு வேறு உடல்களிலே வெளிப்பட்டுத் தோன்றினாற் போன்ற அழகுடையர்
விசயதிவிட்டர்கள் என்றான் என்க.
 

( 29 )