603. செங்கண் மாலவன் தெய்வ மார்பகம்
பங்க யத்துமேற் பாவை தன்னுட
னங்கு லக்கொடி நங்கை சேர்வதற்
கிங்கன் மாதவ மெவன்கொல் செய்ததே.
 

     (இ - ள்.) நங்குலக்கொடி நங்கை - நம்முடைய குலத்தின் கட்டோன்றிய பூங்கொடி
போல்வாளாகிய சுயம்பிரபை, செங்கண் மாலவன் தெய்வ மார்பகம் - சிவந்த
கண்களையுடைய திருமாலாகிய திவிட்டனுடைய தெய்வத்தன்மை பொருந்திய
மார்பினிடத்தே, பங்கயத்துமேல் பாவை தன்னுடன் - செந்தாமரை மலரின்மேல் வதியும்
திருமகளோடு (முன்னரே சேர்ந்துளாளாகலின்), சேர்வதற்கு - சேர்ந்துவதிவதற்கு, இங்கன் -
இவ்வுலகத்தே, எவன்கொல் மாதவம் செய்ததே - எத்தகைய பெருந்தவம் நோற்றனளோ! (எ - று.)

     பெறற் கரிய பேறு தவத்தானன்றிப் பெறலாகா தாகலின் செங்கண் மாலாகிய
திவிட்டற்குத் தேவியாக நம் சுயம்பிரபை நல்லான் மிகப் பெரிய தவம் நோற்றாளாதல்
வேண்டும் என்றான். உரிமைபற்றி நங்குலக்கொடி என்றான் என்க.
 

( 31 )