615. தாம மென்குழ லார்தடங் கண்ணெனுத்
தேம யங்கிய செங்கழு நீரணி
காம மென்பதொர் கள்ளது வுண்டரோ
யாம மும்பக லும்மயர் வெய்தினான்
 

     (இ - ள்.) தாமம் மென்குழலார் தடம் கண் எனும் - மலர் மாலை சூட்டப்பட்ட
மெல்லிய அளகத்தையுடைய காரிகையாரின் கண்கள் என்று கூறப்படுகின்ற, தேம் மயங்கிய
செங்கழுநீர் அணி - தேன் பொருந்திய குவளை மலரின்கண் விளங்கும் அழகிய, காமம்
என்பதோர் கள்ளது உண்டு-காமம் என்று கூறப்படும் கள்ளைப்பருகி, யாமமும் பகலும்
மயர்வெய்தினான் - இரவும் பகலும் மயங்கிக்கிடந்தான், (எ - று.)

கள்ளது - என்புழி, அது பகுதிப் பொருளது. அரோ : அசை. கண் களவு கொள்ளும் சிறு
நோக்க முதலியனவே காம வின்பத்திற் பெருஞ் சிறப்புடையன ஆகலின் கண் எனும்
செங்கழுநீர் அணி காமம் என்றனர். கழிபெருங் காமமாகலின் யாமமும் பகலும் மயர்
வெய்தினான் என்றார். மயர் வெய்துதல் - அதன்கண் மயங்கி அழுந்துதல் என்க.
 

( 43 )