சதவிந்து என்பான் அச்சுவகண்டற்கு
அரசியலறம் கூறல்
622. ஆங்கொர் 4நாளிறை பெற்றறி வின்கடல்
தாங்கி னான்சத விந்துவென் பானுளன்
5நீங்க லாப்புக ழான்ற னிமித்திகன்
வீங்கு வெல்கழ லாற்கு விளம்பினான்.  


      இதுமுதல் 8 செய்யுள் ஒருதொடர் நிமித்திகன் கூற்று.

     (இ - ள்.) அறிவின்கடல் தாங்கினான் - அறிவுக்கடலைத் தன்னகத்தே உடையவனும்
நீங்கலாப்புகழான் - அழியாத பெரும்புகழ் படைத்தவனும், சதவிந்து என்பான் - சதவிந்து
என்னும் பெயரையுடையவனும் ஆகிய, தன் நிமித்திகன் உளன் - தன் அவைக்களத்தே
உள்ளவனாகிய நிமித்திகன், வீங்குவெல் கழலாற்கு - மிக்க வெற்றியையுடைய
வீரக்கழலணிந்த அச்சுவகண்டனுக்கு ஆங்கு ஓர்நாள் இறை பெற்று - அவ்விடத்தே ஒரு நாளில் அரிதில் ஒரு செவ்விபெற்று, விளம்பினான்- சொல்வானாயினான், (எ - று.)

செவ்வி பெறுதல் அரிதென்பது தோன்ற, ஆங்கோர் நாளிறை பெற்று என்றார்.
அறிவின் கடலன்ன நீங்காப்புகழான் சதவிந்து வெல் கழலாற்கு விளம்பினான் என்க.

( 50 )