அரசர்க்குரிய அறுவகைப பகைகள்

625. மாசி றண்டன்ன தோண் மன்ன மன்னிய
கோசி றண்டத்த னாய்விடிற் கொற்றவ
னேசி றண்டம் பரவவிவ் வையக
மாசி றண்டத்த னாயினி தாளுமே.
 

     (இ - ள்.) மாசுஇல் வண்டு அன்னதோள் மன்ன - குற்றமற்ற தூண்போன்ற
தோளையுடைய வேந்தே!, கொற்றவன் - ஓரரசன், மன்னிய கோசுஇல் தண்டத்தன்
ஆய்விடின் - தன்பால் நிலைபெற்ற (அறுவகைக்) குற்றங்கள் இல்லாத
செங்கோலனாகிவிட்டால், ஏசு இறு அண்டம் பரவ - குற்றந்தீர்ந்த வானவருலகம்
தன்னைப்புகழும்படி, ஆசு இல் தண்டத்தனாய் - குற்றமில்லாத படைப்பெருக்கமும்
உடையனாய், இவ்வையகம் இனிது ஆளும் - இவ்வுலகத்தை இனிதாக ஆளாநிற்பன்,
(எ - று.)
    
     தண்டு - தூண். கோச - குற்றம். ஏசு - குற்றம், மாசு - குற்றம். ஆசு - குற்றம். ஏசு
இறு அண்டம் என்றது வானவருலகத்தை. கொற்றவன் உட்பகை களைந்து
செங்கோலனாகிவிடின் அவனை அமரர் வாழ்த்துவர். அவனுடைய படைஞரும் நல்லர்
ஆகுவர், உலகம் அவன் அடிதழுவி இனிது வாழும் என்றவாறு.
இச்செய்யுள் சில ஏட்டுச் பிரதிகளில் இல்லை.
 

( 53 )