இதுவுமது

632. ஏந்து தோளவ ருள்ளிளை 2யானமக்
காய்ந்த தொல்பகை யாகுமென் றேயுறப்
போந்தொர் புன்சொ னிமித்தம் புறப்பட
வேந்த யான்மனத் தின்மெலி கேனரோ.
 

     (இ - ள்.) ஏந்து தோளவருள் - உயர்ந்த தோளுடைய அவ்விருவருள் வைத்து,
இளையான் நமக்கு ஆய்ந்த தொல்பகையாகும் என்றே - இளையவனாகிய திவிட்டன்
என்பான் ஆராய்ந்தறிந்ததொரு பழம் பகைவன் ஆவான் என்று, உறப்போந்து ஓர்
புன்சொல் நிமித்தம் புறப்பட - பொருந்துமாறு வந்து ஒரு புல்லிய சொல்லாகிய நிமித்தம்
வெளிப்பட்டதாக, வேந்தயான் மனத்தின் மெலிகேன் - அரசே அஃதறிந்த பின்னர் யான்
என் மனத்துள்ளே மிகவும் வருந்தி மெலியா நின்றேன், (எ - று.)

திவிட்டன் தொல்பகைவன் என நிமித்தம் புறப்பட்டது தீமையாதலின் புன்சொல் நிமித்தம்
என்றான்.
யான் மனத்தின் மெலிகேன் என்றமையால், அவனால் உனக்கு அழிவு நேரும் என்பதைக்
குறிப்பாற் கூறினன்.
 

( 60 )