(இ - ள்.) மாசில் ஆலவட்டத்து எழும் மாருதம் வீச - அழுக்கில்லாத விசிறியால் எழுப்பப்பட்ட காற்று வீசுதலாலே. விண்தொடு மேரு துளங்குமோ! - விசும்பைத் தொடுகின்ற மேருமலை அசையுமோ!, பேசின் மானிடப்பேதைகள் ஆற்றலால் - ஆராய்ந்து கூறுங்கால், மனிதர்களாகிய அறிவிலிகளின் வலியால், ஆசில்தோள் இவைதாம் அசையுமோ - குற்றமற்ற என் தோள்களாகிய இவை அசைந்து விடுமோ!, (எ - று.) விசிறியா லெழுப்பப்படும் காற்றுத் திண்ணிய மேருவினை என்செய்யும் என்றான் என்க. இதனால் தன் பெருமைக்கும் அவர் சிறுமைக்கும் உவமை கூறினான். |