இதுவுமது
639. விச்சை மற்றவர் தம்மை விடுப்பதோ
ரிச்சை யென்கணுண் டாமெனின் யாவரே
யச்ச மின்றிநிற் பாரந் நமித்தநூல்
பொச்ச 3லாங்கொல் புலந்தெழு நீர்மையாய்.
 

     (இ - ள்.) புலந்தெழு நீர்மையாய் - பிணங்கி எழுந்து பேசும் தன்மையுடைய
நிமித்திகனே!, மற்றவர் தம்மை - நீ சொல்லிய அத்திவிட்டன் முதலிய பகைவர்மேல்,
விச்சை விடுப்பதோர் இச்சை - மாயவித்தையை ஏவுதல் வேண்டும் என்னும் ஒரு விருப்பம்,
என்கண் உண்டாம் எனின் - என் உளத்தில் தோன்றிவிடுமாயின், அச்சமின்றி யாவரே
நிற்பார் - அம் மாயப்படைமுன் அஞ்சி ஓடுவாரல்லாது துணிந்து நிற்பார் யாரேதான்!,
அந்நிமித்தநூல் பொச்சல் ஆம்கொல் - உன்னால் போற்றப்பட்ட அந்த நிமித்தநூல்
பொய்ப்படுமொரு குற்றமுடைத்துப்போலும், (எ - று.)

     மானிடரைப் பொருளாக மதித்து என் மாயவிச்சையைவிட என்மனம்
நினைத்தலரிதென்பான், “இச்சை என்கண் உண்டாமெனின்“ என்றான். அவ் விச்சை
என்பாலுளதாக எனக்கு அவர் பகை யாவர் என உன் நிமித்தநூல் கூறிற்று எனின் அது
பொருந்தாப் பொய்ந்நூல் என்றற்கு இதுவே சான்றாகும் என்றான் என்க.
 

( 67 )