வாயிலோனுக் குரைத்தல்
659. வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலி
4னோய்தலி லொண்சுட ராழியி னான்றமர்
மன்னவன் வார்கழல் வாழ்த்தி மடக்கிய
சொன்னவி 1லோலைகை தொழுதன 2ரீந்தார்.
 

     (இ - ள்.) நீள்கடை காப்போய் - நீண்ட வாயிலைக் காக்கும் காவலனே!.
மன்னன்முன் நீ தலைசென்று - உங்கள் வேந்தனாகிய பயாபதியின்பால் நீ சென்ற,
வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின் - உச்சியில் மூங்கில்கள் நீண்டுள்ள
வெள்ளிமலையின் அரசனான, ஓய்தலில் ஒண்சுடர் ஆழியினான் தமர் - ஒழிவில்லாது
ஒளிகாலும் ஆழிப்படையை யுடைய அச்சுவகண்டனைச் சார்ந்த தூதர்கள், வந்து வாய்தலில்
நின்றனர் என - வந்து நம் அரண்மனை வாயிலில் நின்றுளர் என்று, உரை - அறிவிப்
பாயாக( )
     அரண்மனை வாயிலை அடைந்த அத்தூர்கள் வாயில்காவலனை நோக்கிக்
கூறுகின்றவர் “ஆழியினான் தமர் நம் வாயிலில் வந்து நின்றார் என்று உன்னரசற்கு உரை“
என்றார் என்க. தூதருடைய கூற்றில் அதிகார ஆணவம் தோன்றுதல் காண்க.
 

( 87 )