(இ - ள்.) என்றவர்கூற - என்று அத்தூதர்கள் கூறியவுடனே, இருங்கடை காவலன் - பெரிய அரண்மனை வாயில்காப்போன், நன்றென - நல்லது அங்ஙனமே செய்வேன் என்று, நாறு ஒளி நீண்முடியான் அடி - தோன்றாநின்ற சுடரையுடைய நீண்ட முடியையுடைய பயாபதி மன்னன் அடியில் சென்று, மன்ற வணங்கி - மிகத்தொழுது நின்று, மொழிந்தனன் - அத்தூதர்கள் வரவையுரைத்தான், மன்னனும் - அப்பயாபதி மன்னனும், ஒன்றிய போதக என்பது உரைத்தான் - அவர் என் முன்னிலையிற் பொருந்தப் புகுவாராக என்று உரைத்தான், (எ - று.) போதக : வியங்கோள். என்று அத்தூதர் கூறியவுடன், அவ்வாயிலோன் நன்றென நீண்முடியான் அடி மன்ற வணங்கி, அவர் கூறிய கூற, மன்னனும் அவர் இங்குப் போதக என்றனன், என்க. |