பயாபதி தூதர்களை அழைத்துவரப் பணித்தல்

660. என்றவர் கூற விருங்கடை காவல
னன்றென நாறொளி நீண்முடி யானடி
3மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும்
4ஒன்றிய 5போதக என்ப துரைத்தான்.
 

     (இ - ள்.) என்றவர்கூற - என்று அத்தூதர்கள் கூறியவுடனே, இருங்கடை காவலன்
- பெரிய அரண்மனை வாயில்காப்போன், நன்றென - நல்லது அங்ஙனமே செய்வேன்
என்று, நாறு ஒளி நீண்முடியான் அடி - தோன்றாநின்ற சுடரையுடைய நீண்ட
முடியையுடைய பயாபதி மன்னன் அடியில் சென்று, மன்ற வணங்கி - மிகத்தொழுது நின்று,
மொழிந்தனன் - அத்தூதர்கள் வரவையுரைத்தான், மன்னனும் - அப்பயாபதி மன்னனும்,
ஒன்றிய போதக என்பது உரைத்தான் - அவர் என் முன்னிலையிற் பொருந்தப் புகுவாராக
என்று உரைத்தான், (எ - று.)

     போதக : வியங்கோள். என்று அத்தூதர் கூறியவுடன், அவ்வாயிலோன் நன்றென
நீண்முடியான் அடி மன்ற வணங்கி, அவர் கூறிய கூற, மன்னனும் அவர் இங்குப் போதக
என்றனன், என்க.
 

( 88 )