தூதர் பயாபதிக்கு ஓலை கொடுத்தல்
661. பொன்னவிர் நீள்கடை காவலன் போக
வென்னலி னெய்தி யிலங்கொளி நீண்முடி
மன்னவன் வார்கழல் வாழ்த்தி மடக்கிய
சொன்னவி 1லோலைகை தொழுதன 2ரீந்தார்.
 

     (இ - ள்.) பொன்னவிர் நீள்கடைகாவலன் போதக என்னலின் - பொன்னொளி
சுடரும் நீண்ட வாயிலைக் காக்கும் அவ்வாயிலோன் மீண்டுவந்து, தூதர்களை நோக்கி
நீயிர் புகுதுக என்று கூறியவுடன், எய்தி - அத்தூதுவர்கள் அரசன்பாற் சென்று,
இலங்கொளி நீண்முடி மன்னவன் வார்கழல் வாழ்த்தி - விளங்குகின்ற ஒளியையுடைய
நீண்ட முடிமன்னனாகிய பயாபதியின் நெடிய கழல்கட்டிய அடிகளை வாழ்த்தி வணங்கி,
கைதொழுதனர் மடக்கிய சொல் நவில் ஓலை ஈந்தார் - கைகூப்பித் தொழுது சுருளிடப்
பட்ட தூதோலையை அரசன் கையிற் கொடுத்தார், (எ - று.)

     வாயிலோன் அரசன் உடன்பாட்டை உரைத்தலும் தூதர் அரசன்பால் எய்தி அவன்
கழல் வாழ்த்தி ஓலையைத் தொழுது ஈந்தார் என்க.
 

( 89 )