அந்த ஓலையைப் படித்தல்

662. வாசகன் மற்றது 3வாசினை செய்தபின்
மாசக னீள்முடி மன்னவன் முன்னிவை
தேசக மூசிய 4வாழியன் சீர்த்தம
ரோசைக ளோலை 5கொ டொப்ப வுரைத்தார்.
 

     (இ - ள்.) வாசகன் மற்றது வாசினை செய்தபின் - ஏடு படிப்போன் அவ்வோலையை
அரசன் கேட்ப வாசித்த பின்னர், மாசகல் நீள்முடி மன்னவன் முன்னிவை - குற்றந்தீர்ந்த
நீண்ட முடியையுடைய பயாபதி வேந்தன் முன்னர்ப் பின்வருவனவற்றை, தேசு அகம் மூசிய
ஆழியன் சீர்த்தமர் - அகத்தின் கண்ணே ஒளிக்கற்றைகள் மொய்த்த சக்கரப்
படையையுடைய அச்சுவகண்டனுடைய சிறந்த தூதர்கள், ஓசைகள் ஓலைகொடு ஒப்ப
உரைத்தார் - அத்திருவோலையைக் கருத்திற்கொண்டு தம் வாயினாலும் செய்திகள் சில
உரைப்பாராயினர், (எ - று.)

     வாசினை - படித்தல். அவ்வோலை வாசகத்தை ஏடு படிப்போன் அரசனுக்குப்
படித்துணர்த்திய பின்னர். அத்தூதர்கள் பின்வருமாறு கூறினர் என்க. ஓசைகள் -
மொழிகள். ஓலைகொடு - ஓலைவாசகத்தைக் கருத்திற் கொண்டு அதற்கு ஆக்கமான சில
செய்திகளைச் சொன்னார் என்க.
 

( 90 )