இது முதல் மூன்று செய்யுள் குளகம் (இ - ள்.) அகம் ஊடு ஒளி ஓடி எரிந்து முந்துறும் ஆடகம் - அகத்தினூடே ஒளிபாய்ந்து மிளிர்ந்து திகழும் பொன், ஆயிர கோடியும் - ஓர் ஆயிரங்கோடியும், அல்லது - அன்றியும், சூடக முன்கையர் அகம்தோடு மெல்லடி - வளையலணிந்த முன்கையையுடையாரும் அகவிதழ்போன்ற மெல்லியல் அடிகளையுடையாரும் ஆகிய, ஆயிரம் நாடக நாரியர் தம்மையும் - ஓராயிரம் கூத்தியல் அறிந்த விறலியரையும், (எ - று.) அல்லது எனல் வேண்டிய உம்மை தொக்கது. |