665. வெண்கதிர் 7முத்தகில் வேழ மருப்பொடு
கண்கவர் சாமரை வெண்மயி 8ரின்கணம்
தண்கதிர் வெண்குடை யாய்தரல் 9வேண்டுமி
தொண்சுட ராழியி னானுரை யென்றார். 

     (இ - ள்.) வெண்கதிர் முத்து அகில்வேழ மருப்பு ஒடு - வெள்ளிய
ஒளியையுடைய முத்தும் அகிலும் யானைக்கொம்பும் ஆகிய இவற்றோடு, கண்கவர் சாமரை
வெண்மயிரின் கணம் - கண்ணைக் கவர்கின்ற சாமரை செய்தற்கு வேண்டிய
வெண்மையான கவரிமாவின் மயிர்க்கற்றையும், தண்கதிர் - வெண்குடையாய்! - குளிர்ந்த
திங்கட்குடையையுடைய வேந்தே!, நீ தரல் வேண்டும் - நீ எம்மரசற்குத் திறையாகக்
கொடுத்தல் வேண்டும், இது ஒண்சுடர் ஆழியினான் உரை என்றார் - இஃது ஒள்ளிய சுடர்
அமைந்த சக்கரமேந்தும் அச்சுவகண்டனுடைய கட்டளையாகும், என்று கூறினார், (எ - று.)

     ஈண்டுக் கூறப்பட்ட முத்து வேழமருப்பின் அணித்தாய்க் கூறலின் அம்மருப்பில்
விளைமுத் தென்னலாம். முத்தும் அகிலும் வேழ மருப்பும் சாமரை வெண்மயிரின் கணமும்
ஆகிய இவற்றைத் திறையாகத் தரல் வேண்டும், இஃது எம்மரசன் கட்டளையாம் என்றார்
என்க.
 

( 93 )