இதுமுதல் ஐந்து செய்யுட்கள் ஒருதொடர்,
பயாபதி திறை நல்குதல்
675. மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை 1வான்குழா மென்ன வாங்கண்
வெஞ்சுடர் விளங்கு மாடத் திடைநிலை விரவித் தோன்றி
2வஞ்சிநன் மருங்கு னோவ மணிநகைக் கலாவ மின்னச்
செஞ்சுடர்ச் சிலம்பு பாடத் தேன்றிசை பரவச் 3சேர்ந்தார்.
 

     (இ - ள்.) மஞ்சிடை மதர்த்த - முகில் வரவினால் களிப்புற்ற, மஞ்ஞை வான்குழாம்
என்ன - மயில்களின் சிறந்த கூட்டம் போல, ஆங்கண் - அவ்விடத்தே, வெஞ்சுடர்
விளங்கும் இடை நிலை மாடத்து - வெவ்விய ஒளியால் விளக்கமுற்ற இடைநிலை
மாடத்தின்கண், வஞ்சிநுண் மருங்குல் நோவ - வஞ்சிக்கொடி போன்று மெலிந்துள்ள இடை
வருந்தும்படியும், மணிநகைக் கலாவம் மின்ன - மணிகளால் ஆகிய சுடர்க்கற்றையுடைய
காஞ்சிக்கோவை மிளிரவும், செஞ்சுடர்ச் சிலம்பு பாட - செவ்விய ஒளியை உடைய
சிலம்புகள் இசைக்கவும், தேன்திசை பரவ - அளிகள் நான்கு திசைகளினும் இசையெடுத்
தேத்தவும், விரவித் தோன்றிச் சேர்ந்தார் - கலந்து காணப்பட்டு வந்து சேர்ந்தனர்.
(எ - று)

     அம்மகளிர்கள் மயிலின் கூட்டம் போன்று இடைநிலை மாடத்தே வந்து கூடி, நோவ
மின்னப் பாடப் பரவச் சேர்ந்தார் என்க.

( 103 )