676. மாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற்
றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து நல்லார்
பாடலா னரம்பின் 4தெய்வம் படிவங்கொண் டனைய நீரா
ராடலா லரம்பை யொப்பா 5ரவரிலா யிரரை யீந்தான்.

     (இ - ள்.) பாடலால் - இசை பாடுதலில், நரம்பின் தெய்வம் - யாழின்
அதிதேவதையாகிய மாதங்கி, படிவங் கொண்டனைய நீரார் - உருக்கொண்டு
தோன்றியதொத்த தன்மையுடையார், ஆடலால் - கூத்தாடுதலின்' அரம்பை ஒப்பார் -
தேவமகளிர்களை ஒப்பாகும் தன்மையுடையார், மாடெலாம் - பக்கமெங்கும், எரிந்து
மின்னும் வயிரக் குண்டலத்தோடு அம்பொன் தோடு - சுடர்வீசி மின்னாநின்ற வைரம்
என்னும் மணியாற் செய்த குண்டலங்களும் அழகிய பொன்னாலாய தோடுகளும், உலாம் -
உலவாநின்ற, துளங்கித் தோன்றும் சுடிகை - மிளிர்ந்து காட்சியளிக்கும் நுதற்
சுட்டியையுடைய; வாண் முகத்து நல்லார் அவரில் - ஒளிமுகத்தையுடைய அவ்வாடன்
மகளிரில், ஆயிரவரை ஈந்தான் - ஆயிரமகளிரைத் திறையாக நல்கினான், (எ - று.)

     தோடுலாம் முகம், சடிகைவாண்முகம் எனத் தனித்தனி கூட்டுக. நல்லார் நரம்பின்
றெய்வம் படிவங் கொண்டனைய நீரார், அரம்பை, ஒப்பார், ஆயிரவரைப் பயாபதி
திறையாக ஈந்தான் என்க. நரம்பின் தெய்வம் என்றது யாழ்த் தெய்வமாகிய மாதங்கியை.
 

( 104 )