வேறு
பயாபதியின் மனநிலை
677. காய்ந்தொளிர் பவழச் சாதிக் கடிகைகள் காண 1மின்னுப்
பாய்ந்தெழு சுடர்ச்சங் கீன்ற பருமணித் தரளக் கோவை
யேந்தெழிற் காக துண்ட மருப்பிணை கவரிக் கற்றை
2யாய்ந்தெழின் மகரப் பூணா 3னுவப்பன வனைத்து மீந்தான்.
 

      (இ - ள்.) காய்ந்தொளிர் - கனன்றெரிவது போன்று ஒளிரும், பவளச்சாதி
கடிகைகள் - பவள வகைகளான துண்டுகளும்; காணமின்னுப் பாய்ந்து எழுசுடர் சங்கீன்ற
பருமணித் தரளக்கோவை - விரும்பிக் காணுமாறு மின்னல்கள் பாய்ந்தெழுந்து மிளிரும்
சங்குகள் ஈன்ற பரிய மணிகளாகிய முத்துக்களாலய மாலைகளும், ஏந்தெழில் காகதுண்டம் -
மிக்க அழகுடைய அகில்களும், மருப்பிணை - யானைக் கோடுகளும், கவரிக்கற்றை -
கவரிமான் மயிர்க் கற்றைகளும், ஆய்ந்தெழின் மகரப் பூணான் உவப்பன -
ஆராய்ந்தெடுத்து அழகுடைய மகரமீன் வடிவமாகச் செய்யப்பட்ட அணிகலன்களையுடைய
அச்சுவகண்டன் விரும்பிய பொருள்கள், அனைத்தும் ஈந்தான் - முழுதும் கொடுத்தான்,
 (எ - று.)

     பவழக் கடிகைகள், தரளக்கோவை, காகதுண்டம், மருப்பிணை, கவரிக் கற்றை
ஆகியவற்றைப் பூணான் திறையாகக் கொடுத்தான் என்க.

( 105 )