682. முடித்தலை முத்துதிர்ந் தாங்கு நெற்றிமேற்
பொடித்தன சிறுவியர்ப் புள்ளி யொள்ளெரி
யடுத்தெழு சுடராகத் துக்க நெய்த்துளி
4கடுத்தசெங் கண்ணுநீர்த் திவலை கான்றவே.
 

     (இ - ள்.) முடித்தலைமுத்து உதிர்ந்தாங்கு - முடியின்கண் உள்ள முத்துக்கள்
உதிர்வதைப்போல, சிறுவியர்புள்ளி நெற்றி மேற் பொடித்தன - சிறிய
வியர்வையாலுண்டாகிய புள்ளிகள் போன்ற நீர்த்துளிகள் தோன்றி உதிர்ந்தன; செங்கணும் -
சினத்தாற்சிவந்த கண்களும், ஒள்ளெரி அடுத்து எழுசுடரகத்து - ஒளியுடன் பற்றி எரிகின்ற
நெருப்பினுள்ளே, உக்க - பெய்யப்பட்ட, நெய்த் துளிகடுத்த - நெய்த் துளியை ஒத்த;
நீர்த்திவலை கான்றவே - வெப்பமுடைய நீர்த்துளிகளைச் சிதறின, (எ - று.)

நெய்த்துளி கடுத்த நீர்த்திவலை என இயைத்துக்கொள்க. நம்பியின் நெற்றிமேல்
சிறுவெயர்ப்புள்ளி முத்துதிர்ந்தாங்கு பொடித்தன, கண்ணும் நீர்த்துவலை கான்றன என்க.

( 110 )