683. படத்திடைச் சுடர்மணி தீண்டப் பட்டெரி
1கடுத்திடு 2மரவெனக் கனன்ற நோக்கமோ
டடுந்தெரிந் தழல்நகை நக்கு நக்கிவை
யெடுத்துரை கொடுத்தன னிளைய காளையே.
 

     (இ - ள்.) படத்திடை - தனது படத்தின் நடுவில் உள்ள, சுடர்மணி -
ஒளியுடையமணி, தீண்டப்பட்டு - அயலான் ஒருவனால் தீண்டப் பட்டமையால்,
எரிகடுத்திடும் அரவென - நெருப்பை ஒத்துச்சினந் தெழுகின்ற பாம்பைப்போல, கனன்ற
நோக்கமோடு - அழலும் கண்களோடு, அடுத்து எரிந்து - மேலும் மேலும் சினந்து, அழல்
நகை நக்கு நக்கு - சினச்சிரிப்பு அடிக்கடி சிரித்துச் சிரித்து, எடுத்து உரை கொடுத்தனன்
இளைய காளையே - திவிட்டன் பின்வரும் வாசகங்களை எடுத்துக் கூறுவா னாயினான்,
(எ - று.)

     ஒருவனால் தன் படத்திலுள்ள மணி தீண்டப்பட்டதாக, கனன்றெழும் பாம்பேபோல்
நம்பி கனன்றெழுந்து அழல் நகை நக்கு நக்கு எடுத்துக் கூறினான், என்க.
 

( 111 )